துருக்கி, பொருளாதாரச் சூழலைக் கருத்திற்கொண்டு இம்மாதத்தில் 40 நாடுகளுக்கான விமானச் சேவையைத் மீண்டும் தொடர தீர்மானித்துள்ளது.
இதில், முதற்கட்டமாக இத்தாலி, சூடான், ஸ்பெயின், ஐக்கிய அரபு அமீரகம், அல்பேனியா, ஜோர்டன், மொராக்கோ உள்ளிட்ட 15 நாடுகளிடையே இருதரப்பு விமானச் சேவைக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என அந்நாட்டின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கியில் கடந்த திங்கட்கிழமை உள்நாட்டு விமானச் சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில் இம்மாதத்தில் வெளிநாடுகளுக்கு இடையேயான விமானச் சேவையை ஐந்து கட்டமாக தொடங்க இருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆதில் கரைஸ்மெயிலோக்லு தெரிவித்துள்ளார்.
துருக்கியில் ஜூன் 10ஆம் திகதி வடக்கு சைப்ரஸ், பஹ்ரைன், பல்கேரியா, கட்டார், கிரேக்கம் ஆகிய நாடுகளுக்கு விமானச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிட்ட தக்கது.