வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயங்கள் தொடர்பான கடந்தகால செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் கிளிநொச்சியில் இன்று(29) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தினுடைய ஏற்பாட்டில் அதன் தலைவர் எஸ்.சிவகரன் தலைமையில் குறித்த கலந்துரையாடலில் திருகோணமலை மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் தோமஸ் இமானுவேல், அருட் தந்தையர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் எனப் பலர் கலந்துகொண்டுள்ளனர்.