யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் புதிய முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைத்தல் உள்ளிட்ட 3 தீர்மானங்கள் இன்றைய மாநகர சபை அமர்வில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமர்வு இன்றையதினம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது கடந்த 8 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டமையை கண்டித்து யாழ். மாநகர சபை 3 கண்டன தீர்மானங்களை நிறைவேற்றியது.
நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டமையை கண்டித்து சபை அமர்வு 5 நிமிடங்கள் ஒத்திவைத்தல், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இராணுவம் மற்றும் பொலிஸார் உள்நுழைந்தமையை கண்டித்தல் மற்றும் மாநகர சபை எல்லைக்குள் புதிய முள்ளிவாய்க்கால் நினைத் தூபி அமைத்தல் ஆகிய 3 தீர்மானங்கள் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளன.