வெலிகந்த, அசேலபுர பகுதியில் மா அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
மா அரைக்கும் இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்த குறித்த பெண்ணின் கூந்தல் இயந்திரத்தில் சிக்கியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் 40 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
மேலும் சம்பவம் குறித்த விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.