பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு தொடர்பான முக்கிய பேச்சு வார்த்தையொன்று இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் எந்தவித இறுதித் தீர்மானமும் இன்றி முடிவுற்றுள்ள நிலையில் இன்றைய பேச்சுவார்த்தை மிக முக்கியத்துவம் பெறுவதாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தொழில் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வாவின் தலைமையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகியன கலந்துகொள்ளவுள்ளன.