393 பேருக்கு இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டவரோடு நேரடி தொடர்பை கொண்டிருந்ததன் காரணமாக தனிமைப்படுத்திலில் இருந்த சங்கானையை சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ் போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட தென் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், கோப்பாய் விசேட சிகிச்சை நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.