இலங்கையில் கொரோனா தொற்று அச்சத்திற்கு மத்தியிலும் குடும்பங்களுக்கு இடையே முறையான புரிந்துணர்வு இன்மையால் பல கொடூர சம்பவங்கள் பதிவாக்கியவாறே உள்ளன.
மகன் ஒருவரால் தாக்கப்பட்ட தந்தை,பாட்டன் மற்றும் பாட்டி ஆகியோர் பலத்த காயமடைந்த சம்பவம் ஒன்று மீகஹகிவுல பகுதியில் பதிவாகியுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரித்துள்ளனர்.
இந்த நிலையில், தாக்குதலை நடாத்திய சந்தேக நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த மூவரும் மீகஹகிவுல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் மீகஹகிவுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.