ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் 12ஆம் ஆண்டு நினைவூடல் நிகழ்வு இன்று யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் இன்று மதியம் 12 மணியளவில் ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியுடன் பணியாற்றிய ஊடகவியலாளர்கள், அவரது நண்பர்கள் மற்றும் யாழ்.ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அத்துடன் ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தி இறுதி யுத்தத்தின்போது பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்தில் இராணுவத்தின் எறிகணை தாக்குதலில்உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.