தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹுலின் கருத்து தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசமினால் இன்றையதினம் குறித்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்படுவதாகவும், இதனால் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க கூடாது எனவும் ரத்னஜீவன் ஹுல் தனியார் ஊடகமொன்றுக்கு நேற்று வழங்கிய பிரத்தியேக செவ்வியொன்றில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே, குறித்த கருத்து எதிராக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவம் முறைப்பாட்டினை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.