நாவலப்பிட்டி காவற்துறை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தானது நாவலப்பிட்டி ஹரங்கல பகுதியிலிருந்து கொத்மலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி நேற்று மாலை ஹரங்கல – கொத்மலை நீர்தேக்க பிரதான வீதியில் ரத்மிலபிட்டிய பகுதியில் வீதியை விட்டு விலகியதிலேயே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும் முச்சக்கர வண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே முச்சக்கர வண்டி சாரதிக்கு இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் ஹரங்கல பகுதியை சேர்ந்த ஆர்.எம்.புத்திக்க வயது – 30 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டி வைத்தியசாலையில்உயிரிழந்தவரின் சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளதுடன் இவ் விபத்தில் காயமடைந்தவர் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை
பெற்று வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது .