யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியால் வெளிமாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் பேருந்துகள் உள் நுழைவது மற்றும் வெளிச் செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதனடிப்படையில் யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அனுப்பியுள்ள செய்தி குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது .
மேலும் குறித்த குறித்த செய்தியில்“வெளி மாவட்டங்களுக்குச் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் நேராக புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்துத் தரிப்பிடத்திற்குச் செல்ல வேண்டும் என்பதுடன் இலங்கை போக்குவரத்துச் சபையும் தனியார் பேருந்து உரிமையாளர்களும் புதிய பேருந்துத் தரிப்பிடத்தை, பயன்படுத்த மறுத்துவரும் நிலையில் யாழ். மாநகர சபையால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து யாழ்ப்பாணம் போக்குவரத்துப் காவற்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இதனை மீறுபவர்கள் மீது உடனடியாகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வைத்தியசாலை வீதியை குறித்த பேருந்துகள் பயன்படுத்துவது தடை செய்யப்படும் பட்சத்தில்போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைவடையும் எனறும் குறிப்பிட்டுள்ளதுடன் அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.