வவுனியா காத்தார்சின்னகுளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீடொன்றில் இருந்து இன்று காலை துர்நாற்றம் வீசியுள்ளதனை அடுத்து வீட்டிற்கு முன்பாக ஒன்று கூடிய கிராம மக்கள் சந்தேகமடைந்த நிலையில் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் வீட்டினுளா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க இளைஞரை மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் குறித்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த கொழும்பு பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.