வவுனியா, கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியில் நிலத்தில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட வெடிபொருள்கள் சில விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
குறிசுட்டகுளத்தைச் சீரமைப்புச் செய்வதற்கான வேலைகள் இடம்பெற்றவேளை நிலத்தில் சந்தேகத்திற்கிடமான பொருள்கள் இருப்பது அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து கனகராயன்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்துக்குச் விரைந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் வெடிக்காத நிலையில் காணப்பட்ட 15 மோட்டார் செல்களையும், 6 ஆர்.பி.ஜி ரக செல்களையும் மீட்டுள்ளனர்.
இ்ந்நிலையில் குறித்த பகுதியில் மேலும் பல வெடிபொருள்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நீதிமன்ற உத்தரவுடன் அப் பகுதியை ஆழப்படுத்தி மேலும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.