வவுனியா – சிவபுரம் வீதியில் நீர் விநியோகத்திற்காக தோண்டப்பட்ட குழியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நீர் விநியோகத்திற்காக தோண்டப்பட்ட குழியில் சைக்கிளுடன் ஒருவரின் சடலம் இருப்பதை அவதானித்த அப்பகுதி பொது மக்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இன்று குறித்த ஆணின் சடலம் காலை மீட்கப்பட்டுள்ளது.
4 ஆம் கட்டை கற்பகபுரத்தை சேர்ந்த ஒருவரே சடலமாக இவ்வாறு குழியில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெலுக்குளம் காவல்த்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.