கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் வருமான வரி செலுத்த முடியாமல் போனவர்களுக்கு ஜூன் 20ஆம் திகதி வரை தண்டப்பணம் அறவிடப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில், கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அமைச்சரவை இணைப்பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.