யாழ். பல்கலைக்கழக கலைப் பீட மாணவி ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் கல்வியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொவிட் 19 சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படடார்.
மேலும் இந்த மாணவியின் ஆண்டு இறுதிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விசேட ஏற்பாடுகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் செய்துகொடுத்துள்ளது .
அத்துடன் பதுளையைச் சேர்ந்த கலைப்பீட மாணவி ஒருவர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியமை கடந்த வாரம் உறுதிப்படுத்தப்பட்டது. அதனையடுத்து அவர், யாழ்ப்பாணம் கல்வியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொவிட் 19 சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு அவருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.
பல்கலைக்கழகத்தினால் ஏற்கனவே அறிவிக்கப்படடபடி அவருக்கு பல்கலைக்கழகத்தின் ஆண்டு இறுதிப்பரீட்சை இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன் குறித்த மாணவிக்கு சிகிச்சை நிலையத்தில் பரீட்சை எழுதுவதற்கான ஏற்பாடுகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டிருக்கிறது.
மேலும் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் அறிவுறுத்தலுக்கு அமைய, கலைப் பீடாதிபதி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .