யாழ்ப்பாணம் – செம்பியன்பற்று பகுதியில் சட்டத்துக்கு புறம்பான வடிசாராய உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுக்காவல் நடவடிக்கையில் இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
சட்டத்துக்குப் புறம்பான வகையில் வடிசாராய உற்பத்தியில் ஈடுபட்ட 25 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 45 லீற்றர் வடிசாராயம் மற்றும் அதனைத் தயாரிப்பதற்கான உபகரணமும் கைப்பற்றப்பட்டது.
மற்றொரு சம்பவத்தில் 65 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து வடிசாராயம் தயாரிப்பதற்கான உபகரணங்கள் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர்கள் இருவரும் பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சிறப்பு அதிரடிப் படையின் வடமராட்சிக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் புஷ்பகுமார தலைமையிலான அணி இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ள குறிப்பிடத்தக்கது.