யாழ்ப்பாணம் இணுவில் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்று நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.
இணுவில் பாலாவோடை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி நேற்றிரவு 9 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் இவ்வாறு தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
