யாழ்ப்பாணம், மறவன்புலவு கிழக்கு மணற்காட்டு கந்தசுவாமி ஆலயத்தை அண்டிய பகுதிகளில் இன்று பிற்பகல் 3 மணியளவில் மினி சூறாவளி தாக்கியதில் 5 வீடுகள் சேதமடைந்துள்ளன.
அத்துடன் மணற்காட்டு கந்தசுவாமி ஆலயம் ஒளி சுட்டான் ஞானவைரவர் ஆலயம் மறவன்புலவு பொதுநோக்கு மண்டபம் உள்ளிட்டவை முற்றாக சேதமடைந்துள்ளன.
பாரிய இரைச்சலுடன் 3 நிமிட நேரம் நீடித்த சூறாவளி வீட்டின் கூரைகள் அனைத்தினையும் தூக்கி சென்றதுடன் கோழிக் கூண்டுகள் மாட்டுக் கொட்டில் சுற்று மதில்கள் உள்ளிட்டவையும் சேதம் அடைந்துள்ளது.