யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பிரதேசத்தில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களில் மூவர் காயமடைந்துள்ளனர்.
கைதடி நாவற்குழியைச் சேர்ந்த 43 வயது நபர் ஒருவரும், கெற்பேலியைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவரும், கிளாலியைச் சேர்ந்த 47 வயது நபர் ஒருவருமாக மூவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.