நாளுக்கு நாள் கொரோனாவினாவின் வீரியம் அதிகரித்து வரும் தற்போதைய சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டத்தினை தளர்த்துவது என்பது சாத்தியமற்றதாகும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன யாழ்ப்பாண விஜயத்தின் போது தெரிவித்துள்ளார்.
வடக்கிலுள்ள அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு அமைச்சு என்ற வகையில் எங்களிடம் உள்ளது.
எனவே கொழும்பைப் போல தொற்று அதிகம் உள்ள அபாய வலயமாக யாழ்ப்பாணம் காணப்படுகின்றது. எனவே தற்போதைய நிலைமையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கை தளர்த்துவது சாத்தியமற்ற விடயம் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து மேலும் கருத்து தெரிவித்த பாதுகாப்புச்செயலாளர்..
யாழ்ப்பாண மக்களுக்கு தான் இரண்டு கோரிக்கைகளை முன் வைப்பதாக பாதுகாப்பு செயலர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
ஒன்று ஊரடங்கு வேளையில் வீடுகளில் தனிமையாக இருங்கள்.
மற்றையது உண்மையை பேசுங்கள் ஏனெனில் நாங்கள் உங்களுக்காக சேவையாற்ற தயாராக இருக்கின்றோம்.
எனினும் நீங்கள் உண்மையைக் கூறாது விட்டால் நாம் எந்த வித செயற்பாட்டையும் முன்னெடுக்க முடியாது.
எனவே வடக்கில் உள்ள மக்களிடம் நான் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன் அதை மக்கள் ஏற்று நடப்பார்கள் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.