ஒரு வாரத்திற்குள் இலங்கையில் மூன்று மலேரியா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் 2016 ஆம் ஆண்டு இலங்கை மலேரியா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது.ஆனால் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மலேரியா நோயாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஆபிர்க்க நாடுகளில் இருந்து வருகை தந்தவர்களில் மூவரே மலேரியா நோயாளியாக அடையாளங் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் இலங்கைக்கு வந்தவேளை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மலேரியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதுடன் இவர்கள் மூவரும் பொரலஸ்கமுவ, பேருவல, மற்றும் ஹொரன பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .