மே மாத மின்சாரப் பட்டியல் கட்டணக்கழிவுகளை உள்ளடக்கப்பட்டு வழங்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்திற்கான மின் கட்டணப் பட்டியல் அதிகரிக்கப்பட்டிருந்தமையால் பாவனையாளர்கள் நெருக்கடிக்கு முகம் கொடுத்ததாக விசனம் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் மே மாதம் பாவனையாளர்களுக்கு இலங்கை மின்சார சபை நிவாரணம் வழங்கவுள்ளதுடன், இம்மாதம் வழங்கப்படும் மின் பட்டியலில் கட்டணக் கழிப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.