நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 அச்ச்சுறுத்தல் காரணமாக தொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறுபொது மக்களிடம் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே வேண்டுகோள் விடுத்துள்ளார் .
அத்துடன் பொது மக்களின் பங்களிப்பு இன்றி கொவிட் 19வைரஸைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவ் விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
அதிகளவிலான மக்கள் இருக்கும் இடங்களைத் தவிர்த்தல்,பயணங்களை குறைத்துக்கொள்ளுதல்,
முக்கவசம் அணிதல் மற்றும் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் கொரோனா தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கை ஆரம்பித்ததன் பின்னர் வைரஸை அதிக அளவில் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .