பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபாவை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு இடைக்கால தடை விதிக்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்வைத்த கோரிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானியை வலுவற்றதாகக் கோரி தாக்கல் செய்யப்பட மனு இன்றையதினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படது.
அத்துடன் குறித்த வர்த்தமானிக்கு எதிராகஇடைக்கால தடை விதிக்குமாறு கோரப்பட்ட போதும் நீதிமன்றம் அதனை நிராகரித்தது.
மேலும் இந்த மனு மீதான விசாரணைகளுக்கு எதிர்வரும் மே மாதம் 5ஆம் மற்றும் 17ஆம் திகதிகளை குறித்தொதுக்கி வழக்கினை நீதிமன்றம் பிற்போட்டது.