தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் எந்தவிதமான பயணக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட மாட்டாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இருப்பினும் கொழும்பிலிருந்து ஏனைய பகுதிகளுக்கு வெளியேறுவார்கள் மீது விரைவான ஆண்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய பாதுகாப்பினை கருதி சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் கொரோனா வைரஸைத் தொடர்ந்து கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டார்.