யாழ்ப்பாணம்- வலிகாமத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்ப்பிக்கும் ஆண் ஆசிரியர்கள் சிலரால் அதே பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அங்கு கல்வி கற்பிக்கும் பெண் ஆசிரியர்களை குறித்த மாணவர்களின் வீடுகளுக்கு அனுப்பி மீண்டும் பாடசாலையில் இணைத்துள்ளனர்.
குறித்த சம்பவத்தால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தாம் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, முறைப்பாட்டாளர் ஊடாக தமது கோரிக்கை கடிதத்தை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடாக பதிவு செய்துள்ளனர்.
மனித உரிமை ஆணைக்குழுவின் அமைப்பாளரை குறித்த விடயம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த சம்பவம் தொடர்பாக முறைப்பாடு கிடைத்ததாகவும் இது தொடர்பில் மாகாண கல்வி அமைச்சை விளக்கமளிக்குமாறு எழுத்துமூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.