கொவிட் 19 தொற்றானது நாட்டிடை மிகவும் தாக்கி வருகின்ற சந்தர்ப்பத்தில் பாதுகாபற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில் பாடசாலைகளில் வைபவங்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.இவ்வாறு தடைவிதிப்பதற்கான காரணம் குறித்தும் கல்விஅமைச்சினால் தெளிவுபடுத்தப்படுகிறது.
அதன் பிரகாரம் தற்போது காணப்படும் சுகாதார பிரச்சனைக்கு பொறுப்புடன் முகம் கொடுத்தவாறு மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் பாடசாலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், மாணவர்களின் கல்வியில் தரமான விருத்தியை ஏற்படுத்துவதற்குரியதான விடயதானங்களுக்குஇணையான மற்றும் விடயதானம் சாராத நடவடிக்கைகள் தவிர்ந்த பேண்ட் வாத்திய இசைக்குழு நிகழ்வுகள், ஊர்வலங்கள் ஆகியவற்றினை இடைநிறுத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அனைத்து மாகாண, வலய, கோட்டக்கல்வி அதிகாரிகளுக்கும் பிரிவெனாதிபதிகள் மற்றும் அதிபர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும் பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்கலிம் எண்ணிக்கையானது 70% ஐத் தாண்டியுள்ளதென கல்விஅமைச்ச்யன் செயலாளர் குறிப்பிட்டுளார்.
பல்வேறு நிகழ்வுகள் மற்றும் ஊர்வலங்கள் பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்தி செயற்படுவதாக வேறு சில பாடசாலைகலினால் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைவாக, நாட்டில் நிலவும் சூழ்நிலையினை கருத்திற்கொண்டு கல்வி அமைச்ச்சு மேற்படி தீர்மானத்தை மேட்கொண்டதாகவும் கல்விஅமைச்ச்யன் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடட தக்கது.