நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் 19 தாக்கம் காரணத்தினால் நாளுக்கு நாள் தொற்று ஏற்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது .
அதனடிப்படையில் நேற்றைய தினத்தில் தொற்றுறுதியான 519 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள நாளாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதற்கமைய 120 பேரிற்கு கொழும்பு மாவட்டத்தில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மேலும் கண்டி மாவட்டத்தில் 85 பேருக்கும் கம்பஹா மாவட்டத்தில் 64 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
மேலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் 247 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .