நுவரெலியா நகரத்திலுள்ள சுப்பர் மார்க்கெற் ஒன்றில் இன்று நண்பகல் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தில் சுப்பர் மார்க்கெற்றிலிருந்த பெருமளவான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளதாக நுவரெலியா காவற்துறையினர் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்து இன்று நண்பகல் 12 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.நுவரெலியா பொலிஸார், நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர், இராணுவத்தினர், பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்தனர்.
தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை கணிக்கப்படவில்லை என்பதுடன் தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



