பதுளை, பசறையில் நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
பசறை, மடுல்சீமை, கரடியெல்ல பகுதியில் நீர் நிரம்பிய குழி ஒன்றில் நீராடியபோதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது 38 வயதான தந்தையும் 12 வயதான மகள் மற்றும் 13 வயதான பெறாமகள் ஆகிய மூவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.