நாளைமுதல் நான்கு வகையான பிளாஸ்திக் மற்றும் பொலித்தின் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களை இலங்கையில் தடை செய்வதற்கு சுற்றுச்சூழல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி தடை செய்யப்பட்டுள்ள பொருட்களில் ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய பொலித்தின் மற்றும் பிளாஸ்திக்குகள், பிளாஸ்திக் போத்தல்கள், 20 மைக்ரோனுக்கு குறைவான லன்ச் ஷீட்ஸ், சஷே பக்கட்டுகள் (உணவு அல்லாத மற்றும் மருந்து அல்லாதவை), கொட்டன் பட் மற்றும் ஊதப்பட்ட பிளாஸ்டிக் பொம்மைகள் ஆகியவை அவற்றில் உள்ளடங்குகின்றன.
குறித்த இந்த தகவலினை சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்றையதினம் சுற்றுச்சூழல் அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போது இதனை தெரிவித்திருந்தார்.
மேலும் பல நிறுவனங்கள் கோரியுள்ள கோரிக்கைகளை முன்வைத்து , குறித்த பொருட்களினால் உற்பத்தி செய்யப்்பட்ட பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும் எனவும், அதுவரை குறித்த பொருட்கள் விற்பனை செய்வதற்கு எவ்வித தடையும் விதிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.