நாட்டில் கொவிட் 19 தொற்று நாளுக்கு நாள் பரவல் அடைகின்ற நிலையில் இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சை பிரிவின் பொறுப்புத் தாதிய உத்தியோகத்தருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .
அதனடிப்படையில் அன்டிஜன் பரிசோதனையின் மூலம் நோயாளி ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது .
மேலும் அடையாளம் காணப்பட்ட இருவரின் மாதிரிகளுடன் மேலும் சிலரின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன.
பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று மாலையே வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நோயாளர்களை பார்வையிட வருபவர்களுக்கு தடை விதிப்பது தொடர்பிலும் ஏற்கனவே வந்த சென்றவர்கள் தொடர்பிலும் தகவல் திரட்டப்படுகிறது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வைத்தியசாலை நிர்வாக மட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.