கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி சோரன் பற்று கிராமத்தில் பொது தேவையின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட காணியை தனிநபர் ஆக்கிரமித்தமைக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த காணியானது பால் பண்ணை மற்றும் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் என பல்வேறு தேவைகளுக்கும் காணிகள் ஒதுக்கப்பட்ட காணியினை தனிநபர் ஒருவர் அடாத்தாக பிடித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் அந்த காணிகளில் அபிவிருத்தி வேலைகளையும் முன்னெடுத்து வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஏ9 வீதியின் கரந்தாய் பகுதியில் நடைபெற்றது.அத்துடன் இந்த போராட்டத்தின் போது அபகரிக்கப்பட்ட காணியை மீளப்பெற்றுத் தருமாறு கோரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் இணைப்பாளர் கோ.றுசாங்கனிடம் குறித்த கோரிக்கை அடங்கிய மகஜர் மக்களால் கையளிக்கப்பட்டுள்ளது.