தற்போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகின்ற வகையில் செயற்படுபவர்கள் தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு காவற்துறை தலைமையகம் சகல காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
இதனடிப்படையில் குறித்த தகவல் காவற்துறை தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த அறிவுறுத்தல்கள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள் தொடக்கம் காவல்துறை நிலைய பொறுப்பதிகாரிகள் வரை வழங்க்கப்பட்டுள்ளன.
இதற்கமைய சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகின்ற வகையில் செயற்படுபவர்கள் தொடர்பில் தகவலினை வழங்குவதற்காக 1997 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.