எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு தனது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களினுடைய நெடுந்தூர பயணத்திற்காக இன்று முதல் 200 பேருந்துகள்சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் 21 தொடருந்து சேவைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் எதிர்வரும் 9ஆம் திகதிமுதல் விசேட தொடருந்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பதில் பொது முகாமையாளரான டப்ளியூ.ஏ.டீ.எஸ். குணசிங்க தெரிவித்துள்ளார்.