காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தினை தற்காலிகமாக நீடித்து அதிவிசேட வர்த்தமணியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த வர்த்தமானியின் அறிவித்தலின்படி ஏப்ரல் முதலாம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் 06 மாதங்களால் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வர்த்தமானியானது மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளரின் கைச்சாத்துடன் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தற்போது செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ள சாரதி அனுமதி பத்திரங்களுக்கு இது பொருந்தாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.