நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 தாக்கத்தினால் தொற்றுக்குள்ளானோரின் மரண விகிதம் அண்மைய சில நாட்களாக சடுதியாக அதிகரித்துள்ளதால் இலங்கை ஆபத்தின் விளிம்பில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் கொவிட் 19 தாக்கத்தினால் உயிரிழப்பவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
இந்தநிலையில் நாட்டில் கடந்த 18 நாட்களுக்குள் 100 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் ஜனவரி 29 ம் திகதி நாட்டில் 300வது கொரோனா மரணம் ஏற்பட்டது.
கொரோனா மரணங்களின் எண்ணிக்கைநேற்று 18 நாட்கள் கடந்த போது 400ஆக அதிகரித்துள்ளது.
மேலும் நாளொன்றுக்கு 5 தொடக்கம் 8 கொரோனா மரணங்கள் தறபோது பதிவாகி வருகின்றன.
200வது கொரோனா மரணத்தின் பின் 300வது கொரோனா மரணம் பதிவாக சுமார் 30 நாட்கள் சென்றது.
300வது கொரோனா மரணத்தில் இருந்து 400வது கொரோனா மரணத்தை பதிவு செய்ய வெறும் 18 நாட்களே சென்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .