யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் இரண்டு விடுதிகள் கோப்பாய் பிரதேசத்தில் கடமையாற்றி தற்போது விடுமுறையில் உள்ள ராணுவ வீரர்களை இருபத்தொரு நாட்கள் தனிமைப் படுத்துவதற்காக நேற்றையதினம் ராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுருந்தது.
இந் நிலையில் இன்றைய தினம் அந்த பகுதியில் பொது மக்களின் எதிர்ப்பு ஏதாவது ஏற்படலாம் என்ற காரணத்தினால் காவல்துறையினர் குவிக்கப்பட்டு காவல்துறை ரோந்து நடவடிக்கையும் பலப்படுத்தப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
எனினும் அந்த இடத்தில் எந்த ஒரு போராட்டமும் பொதுமக்களால் முன்னெடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.