கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 7 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி தற்போது வரை 77 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, இன்றைய தினம் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போது வரை 242 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 161 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.