இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுள் மேலும் 890 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (சனிக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 73 ஆயிரத்து 546 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
நாட்டில் இதுவரையில் 78 ஆயிரத்து 937 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 433 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.