இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை இனங்காண்பதற்கான 20 ஆயிரம் உபகரணத் தொகுதிகள் இலங்கை அரசாங்கத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.
சீனாவின் அலிபாபா குழுமத்தின் நிறுவனர் ஜெக் மா மன்றம் மற்றும் அலிபாபா மன்றம் என்பவற்றின் ஏற்பாட்டில் கொரோனா நோயை இனங்காண்பதற்கான உபகரணத் தொகுதிகளை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளன.
129,011 அமெரிக்க டொலர் பெறுமதியான குறித்த மருத்துவ உபகரண தொகுதிகளை, அவர்களின் இலங்கைப் பிரதிநிதிகளினால் கடந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே இந்த அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக இதுவரை இலங்கையில் 248 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பதோடு 7 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.