யாழ் மாவட்டத்தில் மற்றுமொரு கொவிட் 19 கொத்தனியாக மாறும் அச்சுவேலி சந்தை பகுதியில் வியாபாரிகள் நால்வருக்கு கொரோனா 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் குறித்த சந்தையில் பொது மக்களின் வருகை குறைவடைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொவிட் 19 தொற்றுக்குள்ளன வவியாபாரிகள் நால்வருடன் தொடர்புடையவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் அச்சுவேலி சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும் கொரோனா தொற்றுக்குள்ளான நான்கு வியாபாரிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு சந்தையில் உள்ள கட்டிட தொகுதியில் ஒரே வரிசையில் இருந்து வியாபாரத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அவர்களுடன் நெருங்கி பழகி தொடர்புடையவர்களுக்கு இன்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட
உள்ளமையும் குறிப்பிடத்தக்கது