நுவரெலியாவிலுள்ள தேயிலைத் தொட்டமொன்றில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி தோட்டத்தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லிந்துலையிலுள்ள பிரதேசத்திவுள்ள தோட்டமொன்றில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 59 வயதுடைய 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போது குளவிக்கொட்டுக்கு இலக்காகிய அவர், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, குளவிக்கொட்டுக்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த மாதமும் குளவிக் கொட்டுக்கு இலக்கான நான்கு பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.