கிளிநொச்சி மாவட்டத்தில்இன்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார் .
குறித்த விபத்துச் சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கிளிநொச்ச்சி வைத்தியசாலைக்கு அண்மையில் A 9 வீதியில் இடம்பெற்றுள்ளது .
நெல் ஏற்றிச் சென்ற பரவூர்தியின் சாரதி நித்திரை கொள்வதற்காக வீதியின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார்.
இந்த நிலையில் யாழிலிருந்து தெற்கு நோக்கி பயணித்த மற்றுமொரு பரவூர்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த விபத்தில் மோதிய பரவூர்தியின் சாரதி காயமடைந்த நிலையில் கிளிநொச்ச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளினியோகிச்சி காவற்துறையினர் முன்னெடுத்துள்ளனர் .