வவுனியா கிறிஸ்தவ தேவாலயமொன்றினுள் வைத்து முஸ்லீம் இளைஞனொருவன் நேற்றையதினம் இரவு காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கிறிஸ்தவர்களின் முக்கிய வழிபாட்டு வாரமாக தற்போது காணப்படும் நிலையில் நேற்றைய தினம் குறித்த ஆலயத்தில் இரவு வழிபாடு இடம்பெற்ற நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞனொருவர் தேவாலயத்தினுள் சென்றுள்ளார்.
குறித்த இளைஞனை விசாரணை செய்தபோது 25 வயதுடைய கண்டி அக்குரனை பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் என தெரிவிக்கப்படுள்ளது.
மேலும் குறித்த நபரை உடனடியாக காவற்துறையினரிடம் ஒப்படைத்த நிலையில் வவுனியா காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.