கல்முனை கோயில் வீதியில் அமைந்துள்ள தனியார் பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக கடை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த தீ விபத்து இன்று மாலை 3.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
கல்முனை பொலிஸார் மற்றும் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டிருந்ததுடன் சுமார் 1 ஒரு மணி நேர போராட்டத்தின் பின்னர் தீ மேலும் பரவாமல் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த நாசகார செயற்பாட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கல்முனை காவல்துறையினரால் கைது செய்யப்ப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.