நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 தாக்கத்திலிருந்து மக்கள் அனைவரும் பாதுகாப்பு பெறவேண்டும் என்பதன் காரணத்தினால் எஸ்ட்ராசெனகா கொவிட்-19 தடுப்பூசியை ஏற்றும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன .
அதனடிப்படையில் இதுவரை எஸ்ட்ராசெனகா கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று முதல் அடுத்த இரு நாட்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கு இலங்கையின் தேசிய கொவிட் செயலணி ஏற்பாடு செய்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது .
இதற்கமைய நாராஹேன்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் பெப்ரவரி 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலை 8.30 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள கொழும்புக்கு பெரும்பாலான உறுப்பினர்கள் வருவதின் காரணத்தினால் இந்த வாரமும் தொடர்ந்து தடுப்பூசி வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.