நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழல் காரணமாக 19 மாவட்டங்களில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்கு மீண்டும் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்படும். தொடர்ந்து இதே பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 20 திங்கட்கிழமை காலை 6 மணிவரை நீடிக்கப்படவுள்ளது.
அந்தவகையில் கொரோனா வைரஸ் இடர் வலையங்களாக அறிவிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களுக்கு ஆகிய விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.