எதிர்வரும் பொசன் போயா தினத்திற்குப் பின்னர் நாட்டில் தற்போது இடையிடையே அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவை தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பிரதானி பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரமும் சமூகத்திற்குள் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் ஊரடங்குச் சட்டம் முழுமையாக நீக்கப்படும் என பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இதன்படி நாட்டில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தையும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமுல்படுத்தப்படும் முழு ஊரங்கையும் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மக்களின் வாழ்க்கை முறையானது வழமைக்குத் திரும்பியுள்ளதைத் தொடர்ந்து அரசினால் இநத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பஸில் ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது